கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் சிக்கிய சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சரிதா நாயர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இதில், கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தருவதாக ஏமாற்றி விட்டதாக 2 நிறுவனங்கள் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
சோலார் பேனர் மோசடி குறித்து விசாரிக்க கேரள அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் முன்பு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். இதுவரை 13 பேர் மீது மோசடி ஆதாரங்களை அளித்துள்ளேன். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 9 பேர் மீது டிஜிட்டல் ஆதாரங்களை அளித்துள்ளேன். இந்த பட்டியலில் திமுகவை சேர்ந்த முன்னாள் நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கமும் உள்ளார் என சரிதா நாயர் கூறியுள்ளார்.