தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!

Senthil Velan

புதன், 26 ஜூன் 2024 (17:17 IST)
தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும்  நாடாளுமன்றத்தில்  ஒலிப்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
 
டில்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ராகுல் காந்திக்கு, ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,  மக்களவையில் ராகுலின் குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்டாலினின் வாழ்த்து செய்திக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

ALSO READ: பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

அதில், நன்றி, அன்பு சகோதரர் ஸ்டாலின் அவர்களே.. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்