தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்களை திருடிச் சென்றதாக கூறப்படும் தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14ஆம் தேதி, ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள 'சுதர்மா பவன்' இல் பொருட்கள் கலைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.