தெற்கு டெல்லியின், லாஜ்பத் நகர் கிளினிக்கில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்கு வந்த இளம்பெண் ஒருவரை மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் சுஷிலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் புகாரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கிளினிக்கிற்கு சென்றதாகவும் அங்குள்ள பெண் மருத்துவர் இன்னு சற்று நேரத்தில் கிளம்பிவிடுவார் என கூறி மருத்துவர் சுஷில் தன்னை உள்ளே வர சொல்லி அவரிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும், இது குறித்து வெளியே கூறக் கூடாது என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.