கடந்த பிப்ரவரி மாதம் பழனிக்கு யாத்திரை சென்றபோதுதான் பக்தர்கள் திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி இல்லை என்ற செய்தியை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர் என்றும், இதனை அடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்போது இந்த பஸ் வசதி அறிமுகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் இருந்து தினமும் இரவு எட்டு மணிக்கு புறப்படும் இந்த பேருந்து, மறுநாள் காலை ஏழு மணிக்கு பழனியை சென்றடையும். 55 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் கடக்கும். அதேபோல், பழனியில் இருந்து இரவு எட்டு மணிக்கு புறப்படும் பேருந்து, மறுநாள் காலை 7 மணிக்கு திருப்பதியை வந்தடையும்.