வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய சிலர், டெல்லியில் உள்ள ரயில்வே நிலையத்தை ஆக்கிரமித்து, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டிய நிலையில், அவற்றை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள வாசிர்பூர் என்ற பகுதியில், ரயில் பாதைக்கு இருபுறமும் ரயில்வே நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் பலர் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டியிருந்ததால், அந்த பகுதியில் ரயில் இயக்கத்திற்கு பெரும் இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்தவர்களின் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.