டில்லி கவர்னர் அனில் பைஜல் திடீர் ராஜினாமா...அரசியலில் பரபரப்பு

புதன், 18 மே 2022 (18:58 IST)
டில்லி கவர்னர் அனில் பைஜல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு கவர்னராக நியமிக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால். இவருக்கு டில்லி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், இன்று தனது தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்கான கவர்னர் பதவியில் இருந்து  ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்