100 சதவீத முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி… இலக்கை எட்டிய டெல்லி!

சனி, 25 டிசம்பர் 2021 (14:28 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டெல்லியில் தகுதியானவர்கள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 100 சதவீத இலக்கை எட்டிவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இலக்கை அடைய உதவிய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்