தீவிரவாத செயல்களுக்கு பணம் அனுப்பிய தாவூத் இப்ராஹிம்- என்.ஐ.ஏ தகவல்

செவ்வாய், 8 நவம்பர் 2022 (15:57 IST)
மும்பையில் தீவிரவாத செயல்களுக்கு தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராகிம் ரூ.13 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய அரசால்  மும்பை தொடர் குண்டிவெடிப்பு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது,  இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களை செய்து வருவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள தாவூத் இப்ராஹிம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில், மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளிடம் என்.ஐ. சோதனை நடத்தியதில், சலீக் புரூட், ஆரிஃப் ஷேக் ஷபீர்ஷேக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் தீவிர  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த  நிலையில். தாவூத் இப்ராஹிம், அவரது கூட்டாளியுமான சோட்டாசகீல் ஆகிய இருவரும் சூரத்த்தைச் சேர்ந்த ஒர் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்துதற்காக ரூ.13 கோடி பணம் அனுப்பியுள்ளதாகவும் இப்பணத்தை ஷேபீர், ஆபரிஃப் ஆகியோர் பெற்றதாககவும்,  என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.மும்பையில் தீவிரவாத செயல்களுக்கு தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராகிம் ரூ.13 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

 Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்