வலுவிழந்த அம்பன்: நாளை கரை கடக்கும் என தகவல்!

செவ்வாய், 19 மே 2020 (11:29 IST)
அம்பன் வங்கதேசம் பகுதியில் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த வாரம் அந்தமான் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, இரண்டே நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த நாளே புயலாகவும் மாறியது அம்பன். சூப்பர் புயல் என்னும் மிக அபாயமான கட்டத்தை எட்டியுள்ள அம்பன் வங்கதேசம் பகுதியில் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தற்போது வலுவிழந்துள்ள இந்த புயல் கொல்கத்தாவிற்கு சுமார் 700 கீமி தொலைவில் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது இது மேலும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்து நாளை கரையை கடக்கும். 
 
புயல் கடக்கும் போது மேற்று மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று மணிக்கு 150 - 160 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புண்டு. எனவே கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்