வந்தேபாரத் ரயிலின் மீது மீண்டும் பசுமாடுகள் மோதி விபத்து!!

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (21:46 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் நேற்று மாடுகளின்  மீது விபத்துக்குள்ளான  நிலையில் மீண்டும் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குஜராத் மா நிலம் காந்தி நகரில் இருந்து மஜாராஷ்டிரா தலை நகர் மும்பை   நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத்.  வழிப்பாதையில் குறுக்கே எருமைமாடுகள் புகுந்ததால், விபத்தில் சிக்கி முன் பகுதி  சேதமடைந்தது. இந்த விபத்தில், 6 எருமைமாடுகள் பலியாகின.

இதுகுறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பராத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.

இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று மீண்டும் வந்தே பாரத் ரயிலின் மீது பசுமாடு மோதியதில் முன்பகுதிகள் சேதமடைந்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்