மாட்டுக்கு ”ஸ்வொட்டர்”… What an idea sir ஜி??

Arun Prasath

திங்கள், 25 நவம்பர் 2019 (10:52 IST)
குளிர் காலம் வருவதை முன்னிட்டு அயோத்தியில் உள்ள மாடுகளுக்கு கோட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குளிர் காலம் வருவதையொட்டி அயோத்தியில்உள்ள மாடுகளுக்கு சணலால் உருவாக்கப்படும் கோட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதல் திட்டமாக பைசாங்பூரில் உள்ள 1,200 பண்ணைகளுக்கு 700 எருமைகளும் உட்பட வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என அயோத்தி மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் அதன் பிறகு பசுக்களுக்கும், கன்றுக்குட்டிகளுக்கும் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும், இதன் ஒரு கோட் தயாரிக்க ரூ.250 முதல் 300 வரை செலவாகும் என நகர் நிகாம் கமிஷனர் நிராஜ் சுக்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்