6 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு! – இந்திய நிலவரம்!

வியாழன், 2 ஜூலை 2020 (10:09 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரே வாரத்திற்குள் புதியதாக ஒரு லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது.

ஒரே நாளில் 18 அயிரத்திற்கும் மேற்பட்டோர்ப் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 17,834 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,59,860 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,80,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,053 பேர் பலியான நிலையில் 93,154 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை.

தமிழ்நாடு – 94,049
டெல்லி – 89,802
குஜராத் – 33,232
உத்தர பிரதேசம் – 24,056
மேற்கு வங்கம் – 19,170
தெலுங்கானா – 17,357
ராஜஸ்தான் – 18,312
மத்திய பிரதேசம் – 13,861
கர்நாடகா – 16,514
ஹரியானா – 14,941

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்