தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்த ஜெய்வீர்: காங்கிரஸ் அதிர்ச்சி

புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:29 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெயவீர் என்பவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஜெயவீர் கடிதம் எழுதியுள்ளார் 
பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி முடிவு செய்வதில்லை என்றும் சுயநலன் மற்றும் தனிநபர்களின் கட்சியாக காங்கிரஸ் இருப்பதாகவும் முகஸ்துதியை மட்டுமே கட்சி மேலிடம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஒழுக்க நெறி சார்ந்து என்னால் இதனை ஏற்க முடியவில்லை என்றும் அதனால் கட்சியின் முக்கிய பொறுப்பாக தேசிய செய்தி தொடர்பாளர் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தங்கள் பதவியிலிருந்து விலகிய நிலையில் தற்போது தேசிய செய்தி தொடர்பாளரும் விலகி உள்ளது காங்கிரஸ் கட்சியின் மேல் மட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்