மதிய உணவாக மாட்டிறைச்சி கொண்டு வந்த ஆசிரியர் மீது போலீஸ் புகார்!

வியாழன், 19 மே 2022 (11:48 IST)
மதிய உணவாக மாட்டிறைச்சி கொண்டு வந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அசாம் மாநிலத்தில் 56 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் மதிய உணவாக மாட்டிறைச்சி  கொண்டு வந்தா. அதுமட்டுமின்றி அவர் மாட்டிறைச்சியை சிலருக்கு பகிர்ந்து கொடுத்ததாகவும் அங்கு உள்ள ஒரு சில குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்ததாகவும் இருந்தது
 
இது குறித்து தலைமை ஆசிரியர் மீது மேலாண்மை குழு போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்