முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்!

வியாழன், 12 மே 2022 (10:43 IST)
முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது . அந்த புகாரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூபாய் 2 கோடி வரை பெற்று மோசடி செய்து விட்டதாக தெரிகிறது
 
சிவகங்கை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்