இருளில் மூழ்கும் இந்தியா: நிலக்கரி தட்டுப்பாட்டால் அதிர்ச்சி!

ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (09:04 IST)
நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதால் இந்தியாவின் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுக்கும் பணி தாமதமானது என்றும் அதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான் பஞ்சாப் டெல்லி ஆந்திரா உள்பட ஒரு சில மாநிலங்களில் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாகவும் இதன் காரணமாக மின் வெட்டு அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
குறிப்பாக டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்கள் மின்தட்டுப்பாடு காரணமாக இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தை பொருத்தவரை இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் தமிழகத்திலும் இதே நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்