நவி மும்பை, கார்கர் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணி புரிந்து வந்த அப்சனா சாயிக் மற்றும் அந்த காப்பகத்தின் உரிமையாளர் பிரியங்கா நிகம் (34) ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 6 சிசிடிவி கேமரா வீடியோக்களை சோதனை செய்தனர், அதில் குழந்தையை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது.