இன்று உருவாகிறது அசானி புயல்: சென்னை-அந்தமான் விமானம் ரத்து!

திங்கள், 21 மார்ச் 2022 (07:15 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அசானி புயலாக உருவாக இருப்பதை அடுத்து சென்னை - அந்தமான் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டது என்பதும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக மாற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
 
இந்த புயலுக்கு அசானி புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அசானி புயல் காரணமாக அந்தமான் பகுதியில் கனமழை பெய்து வருவதால் அந்தமானில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்