இன்று மீண்டும் உயிர்தெழுமா சந்திரயான் 3? இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:10 IST)
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை நிலவில் இன்று மீண்டும் உயிர்தெழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விக்ரம் லேண்டர், ரோவருக்கு மறுபிறவி கொடுக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 
இதுவரை நிலவில் சூரிய ஒளி இல்லாத நிலையில் நிலவில் இன்று முதல் சூரியஒளி பட்டு பகல் பொழுது தொடங்குவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவைகளை உயிர்த்தெழ வைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
 
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 முதற்கட்ட ஆய்வை ஏற்கனவே . நிலவில் இருள் சூழ்ந்ததால் கடந்த 2 வாரங்களாக லேண்டர், ரோவரின் செயல்பாடு  நிறுத்தி வைக்கப்பட்டது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்