பாஜக கூட்டணிக்கு வரும் சந்திரபாபு நாயுடு? பேச்சுவார்த்தையில் பவன்கல்யாண்..!

Siva

வியாழன், 8 பிப்ரவரி 2024 (15:58 IST)
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க பல அரசியல் கட்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே அவர் டெல்லி சென்று அமித்ஷா, ஜே பி நட்டா உள்ளிட்டவர்களை சந்தித்த நிலையில் அடுத்த கட்டமாக பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்க பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 
 
பவன் கல்யாண் கட்சி பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் தற்போது சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேச கட்சியின் பாஜக கூட்டணிக்கு வந்தால்ஜெகன்மோகன் ரெட்டியின் ஒ.எஸ்.ஆர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கடந்த 2018 ஆம் ஆண்டு
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்