தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு திடீரென கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக நேற்று மத்திய நிதி அமைச்சகம் கூறியதும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். லட்சுமி விலாஸ் வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இதனையடுத்து நேற்றைய அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்ஐ நோக்கி விரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.