தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதன், 29 செப்டம்பர் 2021 (08:35 IST)
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்குவதால் மக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது 
 
மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் பண்டிகை காலங்களில் கட்டுக்கடங்காமல் கூட்டங்கள் கூடுவதன் காரணமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இருக்கும் நிலையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கொரோனா பரவும் அளவை கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கையையும் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கையையும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்