சென்னை டூ டெல்லி, பெங்களூர்; 39 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு!

புதன், 7 அக்டோபர் 2020 (17:19 IST)
கொரோனா தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கல் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 39 ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. சமீப காலமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மெல்ல ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூர் உள்ளிட்ட அருகாமை மாநிலங்களுக்கு மட்டும் ரயில் சேவை உள்ள நிலையில் இந்த 39 சிறப்பு ரயில்களில் சென்னை – டெல்லி, பெங்களூர், மதுரை, கோவை ஆகிய பகுதிகளுக்கு ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்