சிறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல்....5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

வெள்ளி, 6 ஜனவரி 2023 (19:25 IST)
டெல்லியில் மண்டோலி சிறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மண்டோலி சிறையில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து சோதனை நடந்து வரும் நிலையில், இன்று கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அந்த சிறையின் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா,  உதவி கண்காணிப்பாளார் சந்திரா, சிறை வார்டன் லோகேஷ் தாமா மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கைதிகளிடம் செல்போன் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்