மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) இயக்குநராக உள்ள பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரையை பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு சமர்ப்பித்தது. இதனை மத்திய அமைச்சரவை நியமனக் குழு அனுமதித்து, அவரை மீண்டும் சி.பி.ஐ இயக்குநராக நியமித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பிரவீன் சூட், 2023-ஆம் ஆண்டு சி.பி.ஐ இயக்குநராக தேர்வானார். அதற்கு முன்னர் கர்நாடக மாநில காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.