இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், மாயாவதி குறித்து தயாசங்கர் சிங் தெரிவித்த கருத்து மிகவும் தவறானது. கண்டிக்கத்தக்கது. மேலும் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதாக தயாசங்கர் கூறியது உண்மையே என்றார்.