காங்கிரசில் சசி தரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் கட்சி மாறுவார்கள்: முதல்வர் தகவல்

ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:05 IST)
காங்கிரஸ் கட்சியில் சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என அசாம் மாநில முதல் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவரானார்
 
இந்த நிலையில் அசாம் முதலமைச்சரும் பாஜக பிரமுகருமான பிஸ்வா சர்மா இன்று பேசிய போது காங்கிரஸ் கட்சியில் சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவுக்கு இணைவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்
 
ஆனால் இதற்கு பதிலடி கொடுத்த சசிதரூர் போராடும் துணிச்சல் உள்ளவர்கள் பாஜக கட்சியில் நான் ஒருபோதும் சேர மாட்டார்கள் என்றும் போராடும் தைரியம் இல்லாதவர்கள் தான் பேராசையில் வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்