ஒய். பூரன் குமார் ஒரு "ஊழல் அதிகாரி" என்றும், தனக்கு எதிராக "போதுமான ஆதாரங்களை" திரட்டி வைத்திருப்பதாகவும் சந்தீப் குமார் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்படுவோம் என்ற பயத்திலேயே ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்டதாக சந்தீப் குமார் குற்றம் சாட்டினார்.
அந்த ஐபிஎஸ் அதிகாரி "சாதிப் பிரிவினையைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த அமைப்பையும் தவறாக வழிநடத்தியதாகவும்" குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனது உயிரை தியாகம் செய்து ஒரு விசாரணைக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். இந்த ஊழல் நிறைந்த குடும்பத்தை எந்த காரணம் கொண்டும் விட்டுவிடக் கூடாது," என்று சந்தீப் குமார் தனது இறுதி வேண்டுகோளை விடுத்துள்ளார்.