இங்கே என்ன செய்றீங்க? டெல்லிக்கு போங்க! – அமைச்சருக்கு ஓவைசி அறிவுரை

புதன், 26 பிப்ரவரி 2020 (10:37 IST)
டெல்லி வன்முறையை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளதாக அசாசுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த வன்முறையில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தலைநகரில் ஏற்பட்டுள்ள இந்த கலவரத்தால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து பேசியுள்ள அசாசுதீன் ஓவைசி ”டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்துவதில் பாஜக தோல்வியடைந்துவிட்டது” என்று கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை குறிப்பிட்டு பேசிய அவர் ”உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வன்முறை நிகழ்கிறது. ஹைதராபாத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உடனே டெல்லிக்கு சென்று வன்முறையை கட்டுப்படுத்துங்கள்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்