ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்… டெல்லி மாநில அரசு அறிவிப்பு!

வெள்ளி, 28 மே 2021 (12:38 IST)
டெல்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக 50000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. இப்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு, நோயாளிகள் மரணம் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் இது வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்