பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை செய்ததாக கூறப்படும் நிலையில், இதனை அடுத்து அவர் பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த தகவலை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய போது, "எதிர்க்கட்சி தலைவர்கள் தாங்கள் நினைப்பதை யூகித்து வதந்தியாக பரப்பி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். ஆனால், அந்த ஆலோசனையில் கட்சி வளர்ச்சி மற்றும் பஞ்சாப் மாநில வளர்ச்சி மட்டுமே பேசப்பட்டது.