தீவிரவாதிகள் இன்னமும் காஷ்மீரில்தான் பதுங்கி இருக்கிறார்கள்? - என்.ஐ.ஏ எச்சரிக்கை!

Prasanth Karthick

வெள்ளி, 2 மே 2025 (09:07 IST)

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் என்.ஐ.ஏ, தீவிரவாதிகள் இன்னமும் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த காஷ்மீரி மக்கள், சுற்றுலா கைடுகள் உள்ளிட்ட பலரிடமும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது.

 

இதுதவிர பஹல்காம் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்கள் மற்றும் பஹல்காம் வந்து சென்ற பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களிடம் தேவையான விசாரணையை நடத்துவதற்காக அவரவர் வீட்டிற்கே என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 

என்.ஐ.ஏ திரட்டிய தகவல்களின்படி, பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த பயங்கரவாதிகள் ஒரு வாரத்திற்கு முன்பே அந்த பகுதிக்கு வந்து 4 இடங்களில் உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்னமும் அந்த பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியுள்ளதாக என்.ஐ.ஏ அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இதனால் தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்