கட்சியில் இருந்து விலகிய முதல்வரின் தாயார்: தொண்டர்கள் அதிர்ச்சி!

வெள்ளி, 8 ஜூலை 2022 (22:13 IST)
கட்சியில் இருந்து விலகிய முதல்வரின் தாயார்: தொண்டர்கள் அதிர்ச்சி!
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியிலிருந்து அவரது தாயார் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகனின் கட்சியில் இருந்து விலகுவதாக முதல்வரின் தாயார் விஜயம்மா என்பவர் இன்று அறிவித்தார்
 
முதல்வரின் சகோதரி தனிக்கட்சி தொடங்கியுள்ளதை அடுத்து தனது மகள் கட்சியில் இணைய உள்ளதாக விஜயம்மா  தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயம்மா, மகன் கட்சியிலிருந்து விலகி மகள் கட்சிக்கு சென்றுள்ளதால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்