பிரதமர் மோடிக்கு வந்த 68 பைசா காசோலை எதற்கு தெரியுமா?

திங்கள், 18 செப்டம்பர் 2017 (08:35 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில விவசாயிகள் மோடிக்கு 68 பைசாவுக்கான காசோலையை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். ஆந்திர மாநிலம் வறட்சியின் பிடியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு நீர்ப்பாசன வசதி குறித்து ஆந்திர விவசாயிகளுக்கு எந்தவித உதவியும் செய்யாததை குறிப்பிடும் வகையில் இந்த காசோலை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த காசோலையை சகுநீதி சாதன சமிதி என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளின் சார்பில் பிரதமருக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்