ஆட்டோ மீது அறுந்து விழுந்த மின்கம்பி; 8 பேர் உடல் கருகி பலி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

வியாழன், 30 ஜூன் 2022 (09:25 IST)
ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் சில்லகொண்டையபள்ளி என்ற இடத்தில் விவசாய பணிகளுக்காக காலையிலேயே ஷேர் ஆட்டோ ஒன்றில் மக்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று ஆட்டோ மீது அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதுடன் ஆட்டோவும் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்