நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆந்திராவுடன் கைகோற்குமா தமிழகம்?

புதன், 4 ஏப்ரல் 2018 (20:04 IST)
ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இதனால் கூட்டணி கட்சியான பாஜக - தெலுங்கு தேசம் கட்சி பிரிந்தது.
 
இதற்கு அடுத்து பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், காவிரி விவகாரத்தில் அதிமுகவினர் தொடர் அமலியில் ஈடுப்பட்டு வருவதால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. 
 
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். 
 
தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் பெரும்பான்மை கொண்டு இருக்கும் அதிமுக கட்சி ஆதரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது காவிரி விவகாரம் காரணமாக தமிழக மக்களும் மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதால், இப்பொழுது அதிமுகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் அதற்கான பலன் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்