1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ்- மஹாராஷ்டிர கல்வி வாரியம்

சனி, 3 ஏப்ரல் 2021 (17:53 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணத்தால் அம்மாநிலத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது..

இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 89,129 பேருக்கு கொரோனா, 714 பேர் பலி..44,202 பேர் குணமடைந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா, டெல்லி, கோவா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது

எனவே மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணத்தால் அம்மாநிலத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து மஹாராஷ்டிர கல்வி வாரியம் அறிவித்துள்ளதாவது: 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெறவைத்து உயர்வகுப்புகளுக்கு அனுப்புமாறு உத்தரவிட்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்