மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்.. திடீரென பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு..!

Mahendran

புதன், 10 ஏப்ரல் 2024 (12:19 IST)
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது 
 
ஏற்கனவே இவர் 2014, 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மூன்றாவது முறையாகவும் அவர் மோடியை எதிர்த்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் பாஜகவில் சேர இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
ஒருவேளை அஜய் ராய் பாஜகவில் சேர்ந்து விட்டால் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேறு வேட்பாளரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்