குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 240க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில்தான் விமானம் விழுந்ததாக கூறப்படும் நிலையில், விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது.