சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் வாழலாம் - அரசின் அதிரடி உத்தரவு

திங்கள், 10 செப்டம்பர் 2018 (08:21 IST)
உத்திரபிரதேசத்தில் கைதிகள் சிறையில் தங்களது குடும்பத்தினருடன் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மாவட்ட சிறைச்சாலைக்கு அருகே  ‘தேவி அகில்யாபாய் திறந்தவெளி காலனி’ என்ற புதிய ஜெயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனின் சிறப்பம்சத்தை கேட்டு பலருக்கும் ஆச்சரியம்.
 
அது என்னெவென்றால் மாவட்ட ஜெயிலில் பல வருடங்கள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி காலணியில் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாழலாம் என்பதே.
 
கைதிகள் அவரது மனைவி, குழந்தைகளுடன் தங்கிக் கொள்ளலாம். வெளியே வேலைக்கும் செல்லலாம். காலை 8 மணிக்கு வெளியே சென்று விட்டு, மாலை 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும். முதற்கட்டமாக 10 கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் தங்க வைக்கப்பட்டுள்ளர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்