இளம்பெண்ணை ஏமாற்றி சீரழித்த காமுகி: டெல்லியில் பரபரப்பு

செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:22 IST)
டெல்லியில் பெண் ஒருவரை மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் சிவானி என்ற இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைபுரிந்து வந்தார். வேலை நிமித்தமாக வெளியே சென்ற போது அவரை கடத்திக்கொண்டு சென்ற மர்ம நபர்கள் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்.
 
இதில் கொடுமை என்னவென்றால் இளம்பெண் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். ஏனென்றால் உச்சநீதிமன்றமே ஓரினச்சேர்க்கை தவறு இல்லை என கூறிவிட்டது அல்லவா..
 
இறுதியில் சமூக நல ஆர்வலர் இந்த விஷயத்தில் உள்ளே நுழைந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக நின்று போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரும் அந்த பெண்ணை டார்ச்சர் செய்த அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்