திருப்புளியால் தாக்கப்பட்ட என்ஜினீயர் - கணவன் இறந்தது தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த அவரது மனைவி

புதன், 12 செப்டம்பர் 2018 (10:57 IST)
பெங்களூருவில் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட கணவர் உயிரிழந்ததைத் தெரியாமல் மனைவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரியில் வசித்து வந்த குருபிரசாத் என்பவர் பெல்லந்தூரில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் இவரது மனைவி கர்ப்பமாக இருந்தார்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரு பிரசாத் நெட் செண்டருக்கு சென்றுள்ளார். அப்போது குருபிரசாத்திற்கும் அந்த கடையின் உரிமையாளருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த நபர் திருப்புளியை எடுத்து குருபிரசாத்தின் தலையில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த குருபிரசாத் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே கர்ப்பமாக இருந்த அவரது மனைவிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. குருபிரசாத் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனியில் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டார். சற்று நேரத்தில் குருபிரசாத் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
 
இதனால் அவரது உறவினர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனை அவரது மனைவிக்கு சொன்னால் இரு உயிருக்கும் ஆபத்து என நினைத்த அவர்கள் இதுகுறித்து அந்த பெண்ணிடம் எதுவும் தெரிவிக்காமல், கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினர்.
 
சில மணிநேரத்தில் அந்த பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஒரு உயிர் பிரிந்து மற்றொரு உயிர் பிறந்தது அவரது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்