HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

Prasanth Karthick

செவ்வாய், 2 ஜூலை 2024 (09:25 IST)
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபரை உடனிருந்த நண்பர் மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடக மாநிலம் மாதநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 56 வயது ஆண் ஒருவர். இவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளதால் அதற்காக தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளதை குறித்து யாரிடமும் சொல்லாமல் காசநோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகவே கூறியுள்ளார்.

இந்த நபரின் நண்பர் சியாம் பாட்டீல். கடந்த ஒரு ஆண்டுக்கும் முன்னர் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்றிருந்த நிலையில் அந்த நபர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதனால் சியாம் பாட்டீல் தனது நண்பரை சந்திக்க மேலும் இரண்டு நண்பர்களோடு வந்துள்ளார்.

அப்போது சியாம் பாட்டீல் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து தனது நண்பருக்கு கொடுத்துள்ளார். அவர் மயங்கியதும் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியாமல் அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் வீட்டிலிருந்த பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சியாம் பாட்டீலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்