பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சமுதாயம்: மசோதா நிறைவேற்றம்

வியாழன், 15 டிசம்பர் 2022 (18:09 IST)
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
 
நரிக்குறவர்கள் என்று கூறப்படும் குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்
 
இது குறித்த மசோதா தயாராக இருந்த நிலையில் தற்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளதை அடுத்து அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்