குளத்தில் கார் விழுந்து 7 பேர் பலி!

சனி, 12 மே 2018 (15:56 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்க சென்றவர்களின் கார் குளத்தில் விழந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

 
 
மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழச்சியில் கலந்து கொண்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் கார் ஓன்று ஜிரன்பூரில் சென்றபோது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து முழ்கியது.

 
 
குளத்தின் அடிப்பகுதிவரை கார் சென்றுவிட்டதால் அதில் பயணித்த 5 வயது குழந்தை உள்பட 7 பேர்  மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்