ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு..! ஏப். 20 வரை நீட்டிப்பு செய்தது டெல்லி நீதிமன்றம்..!!

Senthil Velan

செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:38 IST)
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.
 
இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.  தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஜாபர் சாதிக்,  சதா,  முகேஷ்,  முஜிபுர் ரகுமான்,  அசோக் குமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில்,  டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்தப்பட்டனர். 

ALSO READ: அக்கா '1825 என்ற பெயரில்' தேர்தல் அறிக்கை...!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்