மத்தியப் பிரதேசம், கண்ட்வா மாவட்டத்தின் கல்வா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், 45 வயதுள்ள பெண் ஒருவருக்கு பயங்கரமான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, பெண்ணின் பிறப்பு உறுப்புகள் மரக்கட்டையாலும் இரும்புக் கம்பியாலும் தாக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது கருப்பை கட்டாயமாக அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று அரசு மருத்துவமனையில், உள்ளூர் மருத்துவக் கல்லூரி நீதிமன்ற மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில், குழு பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் அறிக்கை வெளியான பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.