ஐரோப்பாவில் புதிய உச்சம்: இந்தியாவில் 3வது அலை தோன்றுமா?

செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:03 IST)
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே தினசரி பாதிப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றிய உச்சத்தில் இருப்பதாகவும் பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றி உள்ளதை அடுத்து ஐரோப்பாவிலிருந்து பலர் இந்தியாவிற்கு வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலும் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
இருப்பினும் இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் ஒரு தடுப்புச் செலுத்தப்பட்டுள்ளதால் மூன்றாவது அலைக்கு வாய்ப்பே இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்