உதயநிதி மீது சுப்ரீம் கோர்ட் தானாக வழக்கு தொடர வேண்டும்: ஓய்வு பெற்ற 262 நீதிபதிகள் கடிதம்..!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:34 IST)
சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 262 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த கடிதத்தில் உதயநிதி வெறுப்பை தூண்டும் வகையில் பேசியது மட்டுமின்றி மன்னிப்பு கேட்கவும் மறுக்கிறார் என்றும் தான் பேசியதை நியாயப்படுத்துகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
உதயநிதியின் வெறுப்பு பேச்சு வகுப்புவாத வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்